• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் செப்.15-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் துரைமுருகன், கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது 2007-09 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.40 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் துரைமுருகன் மீதும், அவரது மனைவி சாந்தகுமாரி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *