• September 4, 2025
  • NewsEditor
  • 0

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் ‘அதிமுக’ வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் அதிமுக-வை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்து தீவிரமாகத் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்கிடையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறார்.

டிடிவி தினகரன்

இந்நிலையில் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது குறித்துப் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை. துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தான் துரோகம் செய்தது சரி என்பது போல ஊர் முழுக்கச் சென்று ஆணவத்துடன் பேசி வருகிறார்.

அம்மாவின் தொண்டர்கள் இணைந்து ‘சரியான முதலமைச்சர் வேட்பாளரை’ தருவார்கள் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. அதனால்தான் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *