
மும்பை: “இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்ற முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என மகாராஷ்டிர அரசுக்கு மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓபிசி பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு கோரியும், மராத்தாக்கள் குன்பிகளின் துணை சாதி என்று அரசாங்கம் அறிவிக்கக் கோரியும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.