
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 1) ஜெர்மனியில் நடைபெற்ற ஜெர்மனி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு ரூ.3819 கோடி முதலீடுகளை உறுதி செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான TN Rising Europe முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 9,070 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.