
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உயர் அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.