• September 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது.

இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. புதிய மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த ஏப்​ரலில் ஒப்​புதல் வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்​டம் 2025 நாடு முழு​வதும் நேற்று அமலுக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *