
புதுடெல்லி: ஜெர்மனியின் கொலோன் நகரில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்பட்டு வந்தது. இத்துறை நிதிப் பற்றாக்குறையால் கடந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதியுடன் மூடப்பட்டது. இதற்கு முன்பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கடைசியாக கடந்த 2021 ஜுலையில் கிடைத்த நிதியால் மூடப்படும் நிலையிலிருந்து தப்பியது. இந்த நிதி, தமிழ்நாடு அரசின் ரூ.1.25 கோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களின் ரூ.1.5 கோடி, ஐரோப்பிய தமிழர் கூட்டமைப்பின் ரூ. 23 லட்சம் ஆகியவை மூலம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் கவனத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஈர்த்ததால் நிதியுதவி அளிக்கப்பட்டது.