
பாட்னா: தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
வாக்காளர் அதிகார யாத்திரையின் இறுதி நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் அதிகார யாத்திரையின்போது கிடைத்த ஆதரவு மிகப் பெரியது. மக்கள் பிஹாரில் இருந்து தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அரியணையில் இருந்து அகற்றுவார்கள்.