
புதுடெல்லி: நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தற்போது செயல்பாட்டில் உள்ள பல வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படாத சூழலில், வாகன ஓட்டிகள் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.