
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம் செய்யப்பட்டார். இவர் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் 40 ஆண்டு அனுபவமுள்ளவர்.
டாக்டர் சித்ரா சர்கார் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நோயியியல் நிபுணர். மேற்குவங்க மாநிலம் கல்யாணி எய்ம்ஸ் தலைவராக இப்போது பணியாற்றி வருகிறார். நரம்பியல் நோயியல், மூலக்கூறு புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவர். மருத்துவக் கல்வி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.