• August 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது என்று நான் நம்புகிறேன். இந்தப் போக்கைத் தடுக்க இந்தத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.
நான் ஒரு தாராளவாத அரசியலமைப்பு ஜனநாயகவாதி. இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *