
திமுக-விலும் அதிமுக-விலும் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் மனோகரன். அவர் தனது கையில், எப்போதும் கோல் ஒன்றை வைத்திருப்பார். அதற்குள்ளே அவர் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் கூட செய்திகள் உண்டு. கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்ஜிஆர் பக்கம் மனோகரன் போனபோது, அவரை ‘மந்திரக்கோல்’ என்று எழுத்துகளில் வசைபாடினார் கருணாநிதி. மீண்டும் அவர் கருணாநிதியின் தம்பி ஆனபோது, அவரை ‘மந்திரக்கோல் மைனர்’ என்று ஜெயலலிதா போன்றவர்கள் கிண்டலடித்தார்கள்.
இப்போது அதுவல்ல விஷயம்… அதேபோன்றதொரு மந்திரக்கோலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இப்போது கையில் வைத்திருக்கிறார். அண்மையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு மகனையும் தம்பியையும் அழைத்துக் கொண்டு வந்த பிரேமலதா கையில் அந்த ‘மந்திரக்கோல்’ இருந்தது.