
பெரம்பலூர்: மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் கீழே தூக்கி வீசப்பட்ட இளைஞர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் வலம் வந்தபோது, அங்கு நின்ற இளைஞர் ஒருவரை பவுன்சர்கள் (பாதுகாவலர்கள்) கீழே தூக்கி வீசினர். இதில், அந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு விஜய் எந்த ஆறுதலும் கூறவில்லை. அந்த இளைஞர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியது.