• August 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாய்​கள் மனிதர்​களுக்கு உண்மை​யான தோழர்​களாக​வும், குடும்ப உறுப்​பினர்​களாக​வும் வீட்​டின் பாது​காவலர்​களாக​வும் விளங்​கு​கின்​றன. இந்து மரபில், பைர​வர் வடிவ​மாக வழிபடப்​படும் நாய்​கள், விசு​வாசத்​தை​யும், நன்​றியை​யும் வெளிப்​படுத்​துகின்​றன.

இந்​தி​யா​வில், நகர்ப்​புறமோ, கிராமப்​புறமோ, நாய்​கள் மனிதர்​களு​டன் நெருங்​கிய பிணைப்​பைக் கொண்​டுள்​ளன. தெரு நாய்களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பு, நாய்க்​கடி மற்​றும் பொது​மக்​களின் பாது​காப்பு குறித்து தற்​போது கவலைகள் எழுந்​துள்ள நிலை​யில், நாய்க்​கடி ஏற்​பட்​டால் உடனடி மருத்​துவ சிகிச்சை பெறு​வது குறித்து பொது​மக்​களுக்கு விழிப்​புணர்வு தேவை. மத்​திய, மாநில அரசுகள் தெருநாய்​களுக்கு கருத்​தடை, தடுப்​பூசி திட்​டங்​களை தீவிரப்​படுத்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *