• August 27, 2025
  • NewsEditor
  • 0

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டத்​தில் மகாத்மா காந்தி பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் பயிலும் திருநங்கை மாணவர்​கள் தனி​யாக விடுதி கட்​டித் தர வேண்​டும் என நீண்​ட​கால​மாக கோரி வந்​தனர். இதையடுத்​து, அப்​பல்​கலைக்​கழக வளாகத்​தில் மாநிலத்​திலேயே முதல் முறை​யாக திருநங்கை மாணவர்​களுக்கு தனி​யாக தங்​கும் விடுதி கட்​டப்​பட்​டுள்​ளது. இதை மாநில சமூக நீதித் துறை அமைச்​சர் ஆர்​.பிந்து நேற்று முன்​தினம் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து திருநங்கை மாணவர் ஒரு​வர் கூறும்​போது, “நாங்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் கிடைப்பது சிரமம். கிடைத்தாலும் வாடகை அதிகம். இப்போது தனி விடுதி திறந்​திருப்​பது ஒரு வரப்​பிர​சாதம்​" என்​றார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *