
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.2,133.26 கோடி அரசு மானியத்துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்கப்பட்டு 66,018 புதிய தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான இலக்கினை விரைவில் அடைய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும்.