
சென்னை: வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.