
மதுரை: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆன்லைன் சேவைகளை பெற ஓடிபி எண் பெற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கீரைத்துறையைச் சேர்ந்த தங்கமாரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆன்லைன் வழியாக பெறப்படும் சேவைகளுக்கு ஆதார் எண், ஓடிபி எண் போன்ற விபரங்களை கேட்கப் படுகிறது. குறிப்பாக காவல் துறை குடியுரிமை பிரிவு, மின்னணு சேவைகள், நில ஆவணங்கள் பிரிவு, ஓலா, உபர், ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் நுழைய இதுபோல மொபைல் எண்களும், ஓடிபி எண்களும் பெறப்படுகின்றன.