
பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் புலம்பெயர் மக்கள் குறித்து இப்போது பேசுவதற்கு காரணம் ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் என அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
“பிஹாரில் எங்கள் கட்சியை பார்த்து பிற கட்சிகள் அஞ்சுகின்றன. முதல் முறையாக புலம்பெயரும் பிஹார் மக்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கு ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் காரணம்.