
சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்பொருளில் தனது 30 கலைப் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு காட்சிப்படுத்த உள்ளார்.
வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராமின் மகள் தாரிகா(18). இவர் மகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட தனது 30 கலைப் படைப்புகளை, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கல்பா ட்ரூமா அங்காடியில் ஆக. 30-ம் தேதி முதல் ஒருவாரத்துக்கு காட்சிப்படுத்த உள்ளார்.