• August 26, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

​மாவட்ட திமுக சார்​பில் நடத்​தப்​படும் நிகழ்ச்​சிகளில் மெய்​ய​நாதனின் பெயரும் படமும் திட்​ட​மிட்டு இருட்​டடிப்பு செய்​யப்​படு​வ​தாக நீண்ட கால​மாகவே புகைச்​சல் உண்​டு. சில மாதங்​களுக்கு முன்​பு, பட்​ஜெட்​டில் தமி​ழ​கத்​துக்கு போதிய நிதியை ஒதுக்​காத மத்​திய அரசைக் கண்​டித்து அறந்தாங்கி​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது திமுக. இதற்​காக முதலில் அச்​சடிக்​கப்​பட்ட போஸ்​டரில் அமைச்​சர் மெய்​ய​நாதன் படமோ பெயரோ இல்லை. அதன் பிறகு இதைச் சுட்​டிக்​காட்​டிய பிறகு மெய்​ய​நாதனின் படமும் பெயரும் போஸ்​டரில் சேர்க்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *