
புதுடெல்லி: சிறையில் இருந்தபடி பிரதமர் ஆட்சி செய்யலாமா என மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் அரசியல் சாசன (130-வது திருத்த) மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டின் கீழ் பிரதமரோ முதல்வரோ அமைச்சர்களோ கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு மேல்சிறையில் இருந்தால், சம்பந்தப்பட்டவரின் பதவி தானாகவே பறிபோகும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.