
சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ளார். இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, காவல் துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் மட்டும் அல்லாமல் ஏராளமான உயிர் இழப்புகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.