
கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் ஐம்பொன் உலோகச் சிலை வடிவமைப்புப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,000-க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் 25-க்கும் அதிகமான சிலை வடிவமைப்பாளர்கள், விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமும் வெளிநாடுகளுக்கு சிலைகளை அனுப்பி வருகின்றனர். இங்கு வடிவமைக்கும் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சென்னை தலைமைச் செயலகத் தில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தில் சான்றிதழ் பெறுவது அவசியம்.