
சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்வின்போது தலைமையிடம் நேரடியாக தெரிவிக்கப்படும் உட்கட்சி பிரச்சினைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் ஆளும் திமுக சார்பில் கடந்தாண்டே துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மாவட்ட வாரியாகவும், அணிகள் வாரியாகவும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதன்பின் நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு உட்பட பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.