• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எண்​ணும் எழுத்​தும் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் தேசி​யள​வில் பள்​ளிக்​கல்​வி​யில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கென பிரத்யேக மாநிலக் கல்விக்​கொள்கை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இது சமத்​து​வ​மான, குழந்​தைகளை எதிர்​காலத்​துக்கு தயார்ப்படுத்​தும் சிறந்த கல்வி முறைக்​கான திட்ட வரைவை அடிப்​படை​யாக கொண்​டுள்​ளது.

கரோனா கால கற்​றல் இடைவெளியை சரிசெய்​வதற்​காக இல்​லம் தேடிக் கல்​வித் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு 2021-22-ம் கல்​வி​யாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்​கீடு செய்து 1.65 லட்​சம் தன்​னார்​வலர்​கள் மூலம் 34 லட்​சம் மாணவர்​கள் பயன்​பெற்​றுள்​ளனர். அரசுப் பள்​ளி​களில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்கு முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *