• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மருத்துவ சேவை வழங்​கு​வ​தி​லும், மக்​களின் உடல்​நலனை காப்​ப​தி​லும் தமிழகம் நம்​பர் 1 என்​பதை உறுதி செய்வோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2025-26-ம் ஆண்​டுக்​கான சுகா​தா​ரத் துறை மானியக் கோரிக்​கை​யில், உயர் மருத்​துவ சேவை​கள் வழங்க மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் “நலம் காக்​கும் ஸ்டா​லின்” சிறப்பு மருத்​துவ முகாமை கடந்த 2-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

அன்​றைய தினம் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் நடந்த முகாம்​களில் 44,418 பேர் பயன் பெற்​றனர். இரண்​டாவது சனிக்​கிழமை​யான 9-ம் தேதி 48,046 பேர் பயனடைந்​தனர். 16-ம் தேதி சனிக்​கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்​ப​தால் முகாம் நடை​பெற​வில்​லை. இந்​நிலை​யில், மூன்​றாவது வார​மான நேற்று முன்​தினம் 38 மாவட்​டங்​களில் 38 இடங்​களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாம்​களில் 56,245 பேர் பயன் பெற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *