• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடத்​தில், ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையி​லான சுரங்​கப்​பாதை பணி இந்த மாத இறு​திக்​குள் நிறைவடை​யும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்​தடம், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடம், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்​தடம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்​கத் திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன. பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை, உயர்​மட்​டப் பாதை, மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்​கும் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *