
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரமானந்த் குப்தா. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவிக்கும் வேறு குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களுக்கும் இடையில் சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 2 சகோதரர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்தார். அவர் சார்பில் பிரமானந்த் குப்தா வாதாடினார்.
முன்னதாக பெண்ணின் புகார் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரமானந்த் குப்தா போலியாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 2 சகோதரர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் இடத்தில் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.