• August 25, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: ​குஜராத்தில் போரால் பாதிக்​கப்​பட்ட காசா பகுதி மக்​களுக்கு உதவப் போவ​தாகக் கூறி, அது தொடர்​பாக வீடியோக்களை காட்டி மசூ​தி​களில் சிலர் நன்​கொடை வசூலிப்​ப​தாக புகார் வந்​தது. அதன் அடிப்​படை​யில், அகம​தா​பாத் நகரின் எல்​லிஸ் பிரிட்ஜ் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலில் தங்​கி​யிருந்த அலி மெகாத் அல்​-அ​சார் (23) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அல்​-அ​சார் மற்​றும் 3 பேர் என மொத்​தம் 4 பேர் சிரி​யா​விலிருந்து சுற்​றுலா விசா மூலம் அகமதாபாத் வந்​துள்​ளனர். 4 பேரும் ஒரே ஓட்​டலில் தங்​கி​யிருந்​ததும் காசா மக்​களுக்​காக வசூலித்த நிதி​யைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதனிடையே மற்ற 3 பேர் தலைமறை​வாகி உள்​ளனர். அவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *