
உலகளாவிய வசூலில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 25-ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. முழுக்க கணவன் – மனைவி உறவினை மையப்படுத்தி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதனால் ஓடிடி வெளியீட்டுக்கு பின்னரும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தது. தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.