
அராரியா(பிஹார்): பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் ஏழைகளின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அராரியா என்ற நகரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.