
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போது, முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான செல்லூர் கே.ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்ததாக ஒரு சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக ஓபிஎஸ்கூட செல்லூர் ராஜூவுக்கு வக்காலத்து வாங்கிய நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பான எவ்வித வாட்டமோ, வருத்தமோ இன்றி எடப்பாடியாரின் மதுரை பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ராஜூ.
‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்ட போது, “எடப்பாடியார் புரோகிராம் சம்பந்தமா மாவட்டச் செயலாளர்களோட பேசிட்டிருக்கேன் தம்பி… அவங்கள அனுப்பிட்டு பேசுறேன்” என்று சொன்னவர், அதன்படியே லைனில் வந்தார். இனி, அவரது பேட்டி…