
மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ரூ.2,929 கோடி கடன் பெற்றது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை கிளை சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்கு பதிவு செய்து அனில் அம்பானிக்கு சொந்தமாக மும்பையின் கஃபே பரேட் பகுதியில் உள்ள வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அனில் அம்பானி நிறுவனங்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் பேரில் வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.