• August 24, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்​திர மோடி​யின் காச நோய் (டி.பி.) இல்லா இந்​தியா பிரச்​சா​ரத்தை துரிதப்​படுத்தி வரு​கிறார். அவ்​வப்​போது இந்த பிரச்​சா​ரத்​தின் நிலை பற்றி ஆய்​வுக்​ கூட்​டங்​களை நடத்தி வரு​கிறார்.

மேலும் ராஜ்நந்த்​கான், பஸ்​தார், தாம்​தாரி மற்​றும் காரி​யாபந்த் ஆகிய மாவட்​டங்​களில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளி​களை ராமன் தேகா ஏற்​கெனவே தத்​தெடுத்​திருந்​தார். ஆளுந​ராக பொறுப்​பேற்று ஒரு வருடம் முடிந்த நிலை​யில் மாநிலத்​தில் மீதம் உள்ள மாவட்​டங்​களில் சிகிச்சை பெறும் காச நோயாளி​களை​யும் தத்​தெடுத்​துள்​ளார். இதன்​மூலம் நிக்​ஷய் மித்ரா அந்​தஸ்து பெற்ற அவர், தத்​தெடுத்த நோயாளி​கள் எண்​ணிக்கை 330 ஆக அதி​கரித்​துள்​ளது. காச நோயாளி​களை தத்​தெடுப்​பவர்​களுக்கு நிக் ஷய் மித்ரா பட்​டம் வழங்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *