
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10,850 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களுக்கு பிறகு உபரிநீர் வெளியேற்றப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.