
திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது, விலை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்குக்கொடுத்தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை.