• August 24, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்ந்​த​போது, விலை கட்​டுப்​பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்​கி, குறைந்த விலை​யில் பொருட்​களை கொள்​முதல் செய்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் மக்​களுக்​குக்கொடுத்​தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்​கள் பாது​காக்​கப்​பட்​டனர். ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *