
சென்னை: குற்ற வழக்குகளில் சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவையில் 5 வயது சிறுமியின் கண் முன்பாக, அவரது தாயாரை கொடூரமாகக் கொலை செய்து எரித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.