
சென்னை: இந்தி திரைப்படத் துறையில், என்னைத் தொடர்ந்து தவிர்த்தனர். ஏனென்றால் அவர்கள் என்னை ஒரு கெட்ட செய்தியாக நினைக்கிறார்கள் என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: ““நான் இந்தி படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நான் முதன்முறையாக மலையாளப் படங்களை நிறையப் பார்க்க ஆரம்பித்தேன். ‘ரைபிள் கிளப்’ படப்பிடிப்பிற்குச் சென்றபோது அது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. என் வாழ்க்கையை மாற்றிய அனுபவமாகவும் இருந்தது.