
சென்னை: தேங்கிய மழைத் தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடியுடன் கூடிய திடீர் மழை கொட்டியது. அதேபோல், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்திலும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வந்த கொத்தனார் சாமுவேல் (57) என்பவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெரு வழியாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.