
புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் தெரு நாய்கள் இருக்கும் என்று பொதுநல அமைப்பு ஒன்று கணக்கிட்டுள்ளது. அவை அனைத்துக்கும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு அவ்வளவு தொகையை ஒதுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.