
சென்னை: கடுமையான முகச்சிதைவு எதுவு மில்லாமல் 64 வயதான மூதாட்டியின் வாயிலிருந்து பெரிய கட்டியை சிக்கலான ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண் மித்ரா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தா குமாரி (64) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சாப்பிடும் போது உணவை விழுங்கும் போது அசவுகரியமாகவும், தூங்கும் போது குறட்டை அதிகரித்து வந்ததாலும் அவதிப்பட்டு வந்தார்.