
பெங்களூரு: க‌ர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார்.
மேலும் அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகாவும் நானும் ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து ஒன்றாக செயல்பட்டோம். ஆனால் இப்போது வேறு கட்சிகளில் இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.