• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உதவி மையம் அமைத்து முதி​யோர்​களுக்கு சென்னை போலீ​ஸார் உதவி வரு​கின்​றனர். இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 60 வயதுக்கு மேற்​பட்ட முதி​யோர்​களுக்கு உதவ 1252 என்ற எண்​ணுடன் சென்னை காவல் துறை​யில் முதி​யோர் உதவி மையம் செயல்​பட்டு வரு​கிறது. 75 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​களுக்கு உதவிக்​கரம் நீட்ட `பந்​தம்' என்ற சேவை திட்​டம் கடந்த ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின் கீழ் 9499957575 என்ற செல்​போன் எண் மூலம் உதவி கேட்​கும் முதி​ய​வர்​களுக்கு உடனடி உதவி போலீ​ஸார் மூலம் கிடைக்​கிறது. பிள்​ளை​களால் கைவிடப்​பட்ட முதி​யோர்​கள், வெளி​நாடு​களில் பிள்​ளை​கள் வசிப்​ப​தால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்​லாத முதி​யோர்​கள் என தனி​யாக வசிக்​கும் மூத்த குடிமக்​களின் அழைப்​பு​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *