
தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு ஆக.4-ம் தேதி போராட்டத்தை அறிவித்திருந்தது. அவர்களின் கோரிக்கையைத் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நிராகரித்துவிட்டது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், 22.5 சதவிகித ஊதிய உயர்வுக்குத் தொழிலாளர் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.