
மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மக்கள் நலனுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.