• August 23, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் கன்​கெர் மாவட்​டத்​தில் உள்ள பினகுன்டா கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனேஷ் நரேட்​டி. நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்​டாடப்​பட்​டதையொட்டி தேசி​யக் கொடி ஏற்றி நரேட்டி மரி​யாதை செலுத்​தி​னார்.

இந்த நிலை​யில், கடந்த திங்​கள்​கிழமை நரேட்டி, சோட்டே பெதியா பகு​தி​யில் மாவோ​யிஸ்ட்​களால் கொலை செய்​யப்​பட்​டது உறு​திப்​படுத்​தப்​பட்​டது. பினகுன்டா கிராமத்​தில்​தான் கடந்​தாண்டு ஏப்​ரல் மாதத்​தில் 29 மாவோ​யிஸ்ட்​களை பாது​காப்பு படை​யினர் சுட்​டுக் கொன்​றனர். இதற்கு பழிதீர்க்​கும் வித​மாக மாவோ​யிஸ்ட்​கள் நரேட்டியை கடத்​திச் சென்று கொலை செய்​துள்​ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *