
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் சூடான திருநெல்வேலி அல்வா, வாழைக்காய் சிப்ஸ், முந்திரி பக்கோடா, மோதி லட்டு, ரோஸ் பிஸ்கட், பனீர் டிக்கா, பாதாம், பிஸ்தா, தேநீர், பாசிப்பயறு சுண்டல், வேர்க்கடலை சுண்டல், தட்டாம் பயறு சுண்டல் என 35 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்கள் இடம்பெற்றிருந்தன.