• August 22, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: “தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அழகல்ல. அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம்” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழக முதல்வரை ‘அங்கிள்’ என விமர்சனம் செய்துள்ளார். அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதல்வரை, பெரிய கட்சியின் தலைவரை, 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அழகல்ல. 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக எது வேண்டும் என்றாலும் பேசுவது சரியல்ல. அவருக்கு மக்களும் நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம்” என்று அவர் கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *