
பழநி: பழநியில் ரூ.1.22 கோடி செலவில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்தம் விற்பனை நிலையத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், அபிஷேக பஞ்சாமிர்தம் அரைக் கிலோ டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.